News November 6, 2025
தஞ்சாவூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 17, 2026
தஞ்சை: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 17, 2026
2026 தேர்தல்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சை, ஒரத்தநாடு திருவையாறு ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 2 தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் நடக்க உள்ளது.
News March 17, 2026
தஞ்சை: டாக்டரிடம் ரூ.6.90 லட்சம் அபேஸ்!

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம், இணையவழி வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்ஆப் மூலம் ஆசை காட்டி ரூ.6.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


