News November 6, 2025

கள்ளக்குறிச்சி: வீடு புகுந்து நகைக் கொள்ளை!

image

பரவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த லலிதா கடந்த 4ஆம் தேதி வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த 14,000 ரூபாய் பணம் மற்றும் ஐந்தரை கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பகண்டை அருகே உள்ள அவரியூர் கிராமத்தில் மாணவர்களை பார்த்த பொதுமக்கள் பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News November 6, 2025

திருநங்கைக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கை ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.6) வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News November 6, 2025

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!