News November 6, 2025
கடலூர்: பேருந்து முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை பொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை ராஜன் (27). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்தவர் பாளையங்கோட்டையில் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News February 19, 2026
கடலூர்: பிரபல ரவுடி குண்டாஸில் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்கர்(25). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி, ஊ.மங்கலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, முத்தாண்டிக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் எஸ்பி. பரிந்துரைப்படி ஆட்சியர் உத்தரவுபடி நேற்று சுபாஷ்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News February 18, 2026
கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 18, 2026
கடலூர்: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..

கடலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!


