News November 6, 2025
ராமநாதபுரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான நெசவாளர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண், பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.
Similar News
News February 9, 2026
இராமநாதபுரம்: வட்டாட்சியர்கள் அலுவலக எண்கள்

கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
(தாசில்தார்)இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க
News February 9, 2026
இராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றுமொரு புதிய பாலம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். இதில் பாம்பன் பாலத்தில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பாம்பன் கடலில் புதிய பாலம் அமைக்க கருவி மூலம் சர்வே எடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. SHARE
News February 9, 2026
இராம்நாடு: பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே பீடரோடு பகுதியில் சங்கு கடை நடத்தி வரும் குமரன்குருவின் கடை மீது சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சங்கு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன், கோவிந்தராஜ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


