News November 6, 2025

திருச்சி: இந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட தடை!

image

வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 8-ந்தேதி வரையும் மற்றும் மெட்ராஸ் என்ஜினீயரிங் குரூப் பயிற்சியாளர்களால் 10- 22ம் தேதி வரையிலும், காலை 7.30 – மாலை 5.30 மணி வரையும், இரவு 7 மணி – இரவு 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது. எனவே பயிற்சி தளத்தில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 6, 2025

திருச்சி: நிதி நிறுவன மோசடி – இருவர் கைது

image

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த பாபு, ஆனந்த் ஆகிய இருவர் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று (நவ.5) கைது செய்யப்பட்டு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

News November 6, 2025

திருச்சி: தொழில் நிறுவனத்தில் தீ விபத்து

image

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள ஜமீல் என்ற இரும்பு உருக்கு ஆலை தனது கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரவு அங்கு பணியில் பயன்படுத்திக்கொண்டிருந்த சிசர் லிப்டிங் என்னும் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

error: Content is protected !!