News November 6, 2025
தி.மலை : இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்!

தி.மலை: சந்தவாசல் அருகே உள்ள கேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் மனைவி எழிலரசி(35). இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜா(39). இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த ராஜா எழிலரசியை ஆபாசமாக பேசித் திட்டினார். இதையடுத்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது ராஜா கைது செய்யப்பட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயையே கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 17, 2026
தி.மலை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். இங்கே <
News February 17, 2026
தி.மலை: கோயிலுக்கு வந்தவர் துடிதுடித்து பலி!

ஆந்திர மாநிலம் குண்டூர் பிரம்மம்காரி தெருவைச் சேர்ந்தவர் தோட்டா சத்ய நாராயணா(55). நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன் தினம் தனது நண்பட்ர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது புதுமல்லவாடி கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது இவரது கார் மோதியது. இதில் பலத்த பாயமடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமகா உயிரிழந்தார்.
News February 17, 2026
தி.மலையில் பரிதாப பலி!

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(45). இவரது மகன் கனிஷ்(18), சென்னையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரை சென்னைக்கு பஸ் ஏற்ற பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்றார். பைக்கை கனிஷ் ஓட்டினார். அப்போது, திண்டிவனம் சாலையில் பின்னார் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கனிஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


