News November 6, 2025

திருப்பத்தூரில் ரூ.3 லட்சம் மோசடி!

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று(நவ.5) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் எனும் தொழிலாளி, தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2023ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

Similar News

News November 6, 2025

திருப்பத்தூர்: மிஷின் மீது விழுந்து கொடூர பலி!

image

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தோல் தொழிற்சாலையில், பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவர் இன்று (நவ.6) தோல் பதனிடும் இயந்திரத்தின் மீது ஏறி பணியாற்றி வந்த நிலையில், திடீரென இயந்திரத்தின் மீது இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News November 6, 2025

திருப்பத்தூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் <<>>குற்றப்பிரிவு மூலம் புகார் அளிக்கலாம். (SHARE IT)

News November 6, 2025

திருப்பத்தூர்: பெண்களுக்கு முக்கியமான உதவி எண்

image

திருப்பத்தூர் மாவட்ட பெண்களே.., பொது இடங்கள், அலுவலகம், வீட்டில் வன்முறையை சந்திக்கிறீர்களா..? குடும்பத்தால் அடக்குமுறையா..? நிதிப் பிரச்னையா..? ஆதரவின்றி தவிக்கிறீர்களா..? இனி எதற்கும் கவலை வேண்டாம். அரசின் 24 மணி நேர உதவி எண்ணான 181-ஐ அழைத்தால் பெண்களுக்கான திட்டங்கள், அரசின் சேவைகள், புகார், தீர்வு என அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!