News November 6, 2025

கள்ளக்குறிச்சி: பி.இ பட்டதாரி சடலமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி: வாசுதேவனுார் கிரமத்தைச் சேர்ந்தவர் வசந்த். பி.இ பட்டதாரியான இவருக்கு சொந்தமாக பூண்டியில் ஓர் விவசாய நிலம் உள்ளது. நேற்று(நவ.5) அதற்கு தண்ணீர் பாய்ச்ச அதிகாலை சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது விவசாய கிணற்றில் வசந்த் சடலமாக கிடந்ததைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு படிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 5, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE IT

News February 5, 2026

ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் “என் ஊர், என் கனவு” மாவட்ட தொலைநோக்குத் திட்டம் தயாரிப்பது குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05.02.26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக அறிவித்துள்ள இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News February 5, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (05.02.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!