News November 6, 2025
நெல்லையில் உயரும் குடிநீர் கட்டணம்

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.
Similar News
News November 6, 2025
நெல்லை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News November 6, 2025
நெல்லையில் ரூ.69.95 கோடியில் ஒப்பந்தபுள்ளி வெளியீடு

நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து பாளையில் 3 ஏக்கர் நிலம் தேர்வான நிலையில் அமைச்சர், அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். இதற்கு ரூ.69.95 கோடி மதிப்பில் ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் நவ.13 க்குள் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 6, 2025
நெல்லை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


