News November 6, 2025
புலனாய்வுத்துறையில் 258 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 258 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று, 2023 முதல் 2025 வரை கேட் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News November 6, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 2 நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000-க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நம்மூரிலும் உயர்ந்துள்ளது.
News November 6, 2025
MLA மீது தாக்குதலா?

பிஹாரின் பரசட்டி பகுதியில் மர்ம நபர்கள் தனது கார் மீது கல்லெறிந்து தாக்கியதாக MLA-வும், NDA வேட்பாளருமான ஜோதி மாஞ்சி குற்றம்சாட்டினார். இதனால் காயமடைந்ததாக அவர் போலீஸில் புகாரளிக்க, விசாரணையும் தொடங்கியது. ஆனால், தாக்குதல் நடந்ததற்கான தடையமே இல்லை என போலீஸ் கூறியுள்ளனர். பாஜக இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
விரைவில் அரசியலில் மாற்றம்: அன்புமணி

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தலின்போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிபெறலாம் என கணக்குப்போடும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்; 2026-ல் திமுக தோற்கடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு மூலம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


