News November 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

Similar News

News November 6, 2025

இன்று கனமழை.. 9 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி & வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

News November 6, 2025

Office போகணும்னாலே கஷ்டமா இருக்கா? இந்த டீ குடிங்க!

image

நாள்பட்ட மன அழுத்தம், உடல் சோர்வு, Anxiety காரணமாக காலை எழுந்ததும் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். இதனால் ஆபீஸுக்கு செல்வதில் இருந்து, படுக்கையை விட்டு எழுந்திருக்கும் சாதாரண காரியங்கள் கூட கஷ்டமானதாக தெரியும். இதனை சரி செய்ய, மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தும் துளசி டீ-யை காலையில் பருகுங்கள். இதில் இஞ்சி & தேனை சேர்த்தும் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். SHARE THIS.

News November 6, 2025

தமிழகத்தில் உருவான சமூக நல்லிணக்க கூட்டணி

image

வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி இணைந்து சமூக நல்லிணக்க கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மூவரும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் வாழும் சாதி- சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை வளர்ப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு மத்தியில் தமிழர் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளனர். இதில், பல சமூக தலைவர்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!