News November 6, 2025
கரூர்: கடவூரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி மற்றும் குருணிகுளத்துப்பட்டி கடைவீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிந்தாமணிபட்டி போலீசார், மாப்பிள்ளை மைதீன் (48), கமருதீன் (58), முஜிப் பெருமான் (50) ஆகியோர் மீது வழக்கு பதிந்து , இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News November 6, 2025
கரூர்: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்

கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, பெற இணையதளத்தில் (National Scholarship portal) https://bcmbcmw.tn.gov.in/welfschemes.html என்ற லிங்கில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
கடவூர் அருகே விபத்து

கடவூர் தாலுகா வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(40). இவர் பஞ்சப்பட்டி சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்ற போது அவ்வழியே பூபதி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் குமார் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


