News November 6, 2025
இடையர்பாளையம் அன்னாபிஷேகம் அலங்காரம்

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில், ஸ்ரீ அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் முன்னிட்டு சிவனுக்கு மற்றும் அம்மனுக்கும் அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Similar News
News November 6, 2025
துடியலூர்: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
கோவை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கோவை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


