News November 6, 2025
இடையர்பாளையம் அன்னாபிஷேகம் அலங்காரம்

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில், ஸ்ரீ அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் முன்னிட்டு சிவனுக்கு மற்றும் அம்மனுக்கும் அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Similar News
News February 18, 2026
கோவை: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 18, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

கோவை–ஜெய்ப்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவையிலிருந்து வியாழக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் (06181), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை ஜெய்ப்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு புதன்கிழமை கோவையை வந்தடையும். கோடைக்கால பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04222-642388 என்ற எண்ணை அழைக்கலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


