News November 6, 2025

புதுவை கடற்கரையில் கலாட்டா செய்த 3 பேர் கைது

image

ஒதியஞ்சாலை ஏட்டு முரளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் 3 பேர் பொது இடத்தில் மது அருந்தியபடி, முகம் சுழிக்கும் வண்ணம் அநாகரீமாக நடந்து கொண்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் லாஸ்பேட்டை சரவணன்(22), மகேஷ்வரன் (21), முத்துக்குமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 6, 2025

புதுவை: ONGC நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ONGC நிறுவனத்தில் 153 பணியிடங்களில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆகியோர்களுக்கான ஒரு வருட காலத்திற்கான ரூ.9,600 – ரூ.12,300/- உதவித் தொகையுடன் பயிற்சி வாய்ப்புகள் (Apprenticeship) வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு ongcapprentices.ongc.co.in என்கின்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

புதுச்சேரி: டிப்ளமோ போதும்.. ரூ.29,735 சம்பளம்!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில், காலியாக உள்ள 600 Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Diploma, B.Sc. in Chemistry போதுமானது, சம்பளம் மாதம் ரூ.29,735 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2025ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 5, 2025

புதுவை: அதிகாரிகள் விடுவிப்பு

image

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் செய்தி குறிப்பில், “சப் – கலெக்டராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இஷிதா ரதி கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பொறுப்பிலிருந்தும், ஏனாமில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கித்குமார் கூடுதலாக கவனித்து வரும் ஏனாம் நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என கூறியுள்ளார்.

error: Content is protected !!