News November 6, 2025

இரவில் லேட்டா தூங்கினால் இவ்வளவு ஆபத்தா?

image

இரவில் அதிக அளவிலான செயற்கை வெளிச்சத்தில் (மின்சார விளக்குகள்) இருப்பது, இதய நோய் ஆபத்தை அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிக நேரம் அதிக செயற்கை வெளிச்சத்தில் இருப்பது மூளையை அதிக அழுத்தத்துக்கு ஆளாக்குவதுடன், ரத்தக்குழாய்களை பாதித்து இதய நோய்க்கும் காரணமாகிறது. இரவில் வெளிச்சத்தில் அதிகநேரம் விழிப்பதால் 5 ஆண்டுகளில் 35%, 10 ஆண்டுகளில் 22% இதயநோய் வரும் ஆபத்து அதிகரிக்கிறதாம்.

Similar News

News February 6, 2026

CINEMA 360°: விக்ரமின் ஜோடியாக சுருதிஹாசன்

image

*விமலின் ‘மகாசேனா’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது *சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ 25 நாள்களில் 375 கோடி வசூலித்துள்ளது *ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *’சியான் 63′ படத்தில் சுருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் *கென் கருணாஸ் நடிக்கும் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் நாளை ரிலீசாகும் என அறிவிப்பு

News February 6, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News February 6, 2026

விஜய் வீட்டை விட்டு வெளியே வர முடியாது: ஆர்.பி. உதயகுமார்

image

கரூர் சம்பவத்தின் போது தன்னை பார்க்க வந்தவர்களையே காப்பாற்றாமல் ஓடிய விஜய், TN-ஐ எப்படி காப்பாற்றுவார் என ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை விட கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்களுக்கு தெரியும் என்றும், அதிமுக விமர்சித்தால் வீட்டை விட்டு கூட விஜய்யால் வெளியே வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்கு அடிப்படை மனிதநேயமே இல்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

error: Content is protected !!