News November 5, 2025

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழா

image

நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு அடுத்து நாடு முழுவதும் பிரபலமானது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’. சுதந்திர போராட்ட காலத்தில் தேச உணர்வூட்டி ஊக்கப்படுத்திய இப்பாடல், இன்றும் உத்வேகம் அளிக்கிறது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. வரும் நவ.7-ல், அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Similar News

News February 2, 2026

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

image

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!

News February 2, 2026

‘நாங்கள் சாகப் போகிறோம்’

image

தலைப்பை பார்த்ததும் பதற்றம் ஏற்படுகிறதா? கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், இப்படித்தான் தனது உறவினர்களிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றபோது, கமலேஷ், அவரது மனைவி இலக்கியா, மகள் ஏஞ்சல்(10) ஆகியோர் விஷம் அருந்தி உயிரற்ற உடல்களாக கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News February 2, 2026

அதிரடி திருப்பம்: கூட்டணி அமைத்த பாஜக- காங்கிரஸ்!

image

பரம எதிரிகளான காங்கிரஸ் & பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் மாநகராட்சியின் மேயர் & துணை மேயர் தேர்தலில், இஸ்லாம் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. 84 உறுப்பினர்களை கொண்ட மாலேகான் முனிசிபல் கார்ப்பரேஷனில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி மேலிட உத்தரவின்றி கூட்டணி அமைப்பது குறித்து CM தேவேந்திர பட்னவிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!