News November 5, 2025

கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

image

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News November 5, 2025

அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

image

AUS-க்கு எதிரான டி20 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கைவிட, ஹர்ஷித் ராணாவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த IND அணியின் பவுலிங் கோச் மோர்கல், அர்ஷ்தீப் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், 2026 டி20 WC-க்கு தயாராகும் வகையில், அணியில் சில சோதனை முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, அதை அவரும் புரிந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

ஒரு படம்.. ஓராயிரம் அர்த்தங்கள்! PHOTOS

image

100 பக்கங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை, ஒரு சிறு போட்டோ உணர்த்திவிடும். சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் மீம்ஸ்களும் அப்படித்தான். நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸ், அதே அளவுக்கு சிந்திக்கவும் தூண்டுகின்றன. ஒரே படம் என்றாலும், ஆழமான கருத்துகளை கொண்ட வைரல் மீம்ஸ் கேலரி உங்களுக்காக.. படங்களை Swipe செய்து பார்க்கவும்.

News November 5, 2025

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து VIDEO

image

ஓசூர், Tata Electronics நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,000 பெண் ஊழியர்கள் ஓசூர் – தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்களின் கண்ணியம் காக்க TN அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!