News November 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு

அடுத்த மாதம் துபாயில் ரோல்பால் ஸ்கேட்டிங் உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கம் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுமிதா ஆகியோர் சீனியர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களை மாஸ்டர் பிரேம் நாத் மற்றும் விளையாட்டு ஆய்வாளர்கள் வாழ்த்தினர்.
Similar News
News November 5, 2025
திண்டுக்கல்: காட்டு மாடு தாக்கி மூதாட்டி பலி!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆடலூர் மலைப்பகுதியில் இன்று (நவம்பர் 5) கூலித் தொழிலாளி பாக்கியம் (60) என்பவர் காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து கன்னிவாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
திண்டுக்கல்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News November 5, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <


