News November 5, 2025
மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

மதுரை ஆனையூர் வாகைகுளத்தை சேர்ந்தவர் விமலா (34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவரது இரண்டு மகன்களும் இவரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 5, 2025
மதுரை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News November 5, 2025
மேலூர் பொதுப்பணித்துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே மேல பனங்காடியை சேர்ந்தவர் கார்த்திக்(34). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வந்தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கார்த்திக் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


