News November 5, 2025
தென்காசி: சிறையில் தற்கொலை செய்தவர் உடல் ஒப்படைப்பு

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 30. கூலி தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி சிறை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி 21 தினங்களுக்கு பின் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
தென்காசி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
தென்காசி: இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாம்பவர்வடகரை- வேலாயுதபுரம் ரோட்டில், நேற்று இரவு நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் கடையநல்லூரை சேர்ந்த முத்தையாசாமி மகன் முப்புடாதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாம்பவர்வடகரை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 5, 2025
தென்காசி முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அ. ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


