News November 5, 2025

ஈரோடு அருகே பேருந்தில் இருந்து விழுந்தவர் பலி

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (65). இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படியில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News November 5, 2025

ஈரோடு: ரயில்வே வேலை! APPLY NOW

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 5, 2025

தாளவாடி அருகே விபத்து

image

ஈரோடு, தாளவாடி இருந்து கெட்டவாடிக்கு இன்று காலை 40 மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து தொட்டமுதிகரை அருகே செல்லும் போது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயம் அடைந்தார். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனாது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!