News November 5, 2025
கிருஷ்ணகிரி: ஆசிரியருக்கு பாய்ந்த போக்சோ

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று (நவ.04) கைவினை கலை ஆசிரியரான சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (49), மாணவியரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன்படி பள்ளி சி.இ.ஓ விசாரணை செய்தபோது மாணவியின் புகார் உண்மை என தெரியவந்தது. பின் முருகேசனை பர்கூர் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
Similar News
News November 5, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட உத்தனப்பள்ளி அருகே இன்று (நவ.05) லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது வந்த புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வளையதளங்களில் பரப்ப வேண்டாம், என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
News November 5, 2025
கிருஷ்ணகிரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 5, 2025
கிருஷ்ணகிரி: டிரைவர் உட்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி, விவேக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(26) டிரைவர். கடந்த 7 மாதங்களுக்கு முன், காவியா (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அக்.28ம் தேதி காலை வெளியே சென்ற வாசுதேவன் திரும்பி வரவில்லை. இதேபோல், கூலியம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) எலக்ட்ரீஷியன். 3மாதத்திற்கு முன் வேலை காரணமாக பெங்களூரு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


