News November 5, 2025
வேலூரில் வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 5, 2025
வேலூர்: பெண் போலீஸ் மோசடி!

வேலுார், மேல்பாடி காவல் நிலையத்தில் ஜோதி என்ற பெண் போலீஸ் 8ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், 2019ம் ஆண்டு, தங்கள் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதாக கூறி, இளையநல்லுரை சேர்ந்த சிவக்குமாரிடம் மொத்தமாக ரூ.1,00,000 வாங்கியுள்ளார். பின் சிவகுமார் பணத்தை கேட்கும்போது “பணமெல்லாம் தர முடியாது; வேண்டுமானால் கோயில் கதவை கழற்றி எடுத்து செல்’ என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
News November 5, 2025
வேலூர் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சாலைகளில், மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பல வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


