News November 5, 2025
தஞ்சை: 300 கிலோ போதை பொருள் கடத்தல்

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குகிடமாக வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வந்த கும்பகோணம், புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விம்பாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள், 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 5, 2025
தஞ்சை: நகை கடையில் திருடிய இருவர் கைது

கும்பகோணம் சாரங்கபாணி கீழ் வீதியில் உள்ள நகைக்கடையில், நேற்று 2 இளைஞர்கள் தங்க டாலர் வாங்குவது போல் நடித்து, 1 கிராம் தங்க டாலரை திருடி தப்பி ஓட முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட பெண் ஊழியர் சந்தியா விரட்டி சென்று பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பிடித்தார். இதையடுத்து விசாரித்ததில் மதுரை சேர்ந்த அப்பாஸ்அலி, திருப்பத்தூர் சேர்ந்த முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News November 5, 2025
தஞ்சை: வங்கியில் வேலை.. APPLY NOW!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 5, 2025
தஞ்சை: நாளை மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


