News November 5, 2025
தீராத பணப் பிரச்னை தீர வெற்றிலை தீப ரகசியம்!

மாலை 6 மணிக்கு, நிலை வாசலின் உள்பக்கத்தில், கிழக்கு பார்த்தவாறு ஒரு தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் தடவிய வெற்றிலையுடன், கொஞ்சம் கற்கண்டுகளை வைக்க வேண்டும். அதன் மேல், மண் அகலில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, விளக்கு ஏற்றி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என 27 முறை சொல்லி வழிபட வேண்டும். இது கடன் பிரச்னை, பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட செய்யும் என நம்பப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 5, 2025
ஹரியானாவில் 22 ஓட்டுகள் போட்ட பிரேசில் மாடல்

ஹரியானா தேர்தலில் பிரேசிலை சேர்ந்த மாடல், ’சரஸ்வதி, ரஷ்மி, ஸ்வீட்டி’ என 22 பெயர்களில் வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பிய அவர், ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக பாஜக மாற்றியதாக சாடியுள்ளார். மேலும், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News November 5, 2025
கிரிசில்டா மிரட்டி திருமணம் செய்யவைத்தார்: ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டியதால் அவரை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார். கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்ற அவர், ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், DNA சோதனையில் குழந்தை தன்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
News November 5, 2025
வாக்கு திருட்டு: ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு

ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்., கட்சிக்கே வெற்றி என கூறியதாக தெரிவித்த அவர், மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளார். ஹரியானாவில் நடந்திருக்கும் மோசடிகள் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


