News November 5, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.4) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில், உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News November 5, 2025

திருவாரூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உடற்தகுதி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்பந்தயம் திருவாரூரில் வருகின்ற நவம்பர் 7-ம் தேதி காலை 6 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

திருவாரூர்: சாலையை கடக்க முயன்றவர் பலி

image

மன்னார்குடி மேலச்சேரியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (78), இவர் நேற்று மாலை திருத்துறைபூண்டி மெயின் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற செந்தில்குமார் (47) என்பவர் ஒட்டி வந்த பைக் பிச்சைக்கண்ணு மீது மோதியதில், அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அங்கு வந்த கோட்டூர் போலீசார் பிச்சைக்கண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

திருவாரூர்: மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாளை புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்று பயனடைய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!