News November 5, 2025
முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலக பணியாற்றியவர் மோகனா. இவர் தற்போது திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இன்று நவ.4 அரசு அறிவிப்பின்படி பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்ற உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
திருவள்ளூர்: லேசான மழை; கவிழ்ந்த ஆம்னி பேருந்து!

கும்மிடிப்பூண்டியில் இருந்து 36 பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலை வழியாக சென்றபோது, லேசான சாரல் மழை பெய்ததால் பம்மதுகுளம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப் பகுதியில் பேருந்து மோதியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News November 5, 2025
திருவள்ளூர்: உடல் துண்டாகி பெண் பலி!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே.டி.ஜி நகரில் வசித்து வருபவர் தனசேகர். இவர் மனைவி புஷ்பா. இவர் கடைக்கு செல்வதற்காக செவ்வாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தை இன்று மாலை கடந்து சென்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 5, 2025
வேப்பம்பட்டில் ஆய்வு செய்த ஆட்சியர் மு.பிரதாப்

திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் வேப்பம்பட்டில் ரூ.44 கோடியில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளை இன்று நவம்பர் 04 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்திரவிட்டார். உடன் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


