News November 5, 2025
RAIN ALERT: நாளை மிக கவனம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றிரவு கனமழை பெய்தது. இந்நிலையில், நாளை(நவ.5) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாளும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்!
Similar News
News November 5, 2025
பல் கூச்சத்தை தவிர்க்க இதை பண்ணுங்க!

பல் வலியை கூட, மிகவும் தொல்லை தரக்கூடியது பல் கூச்சம். மிகவும் சூடான, குளிர்ந்த உணவுகள் மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இதற்கு பற்களின் மேல் உள்ள எனாமல் அடுக்கு குறைவதே காரணம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு சில எளிய தீர்வுகளை பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து தீர்வை அறியவும்.
News November 5, 2025
தொடர் சரிவை சந்திக்கும் OPS

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததால் OPS-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், கே.சி.பழனிசாமி, மருது அழகுராஜ் விலகினர். ADMK-ல் இணைக்க வாய்ப்பில்லை என EPS கூறுவதாலும், NDA-வில் இருந்து விலகியதாலும் 2026 தேர்தல் களம் அவருக்கு நெருக்கடி ஆகியுள்ளது. அதிமுக ஒன்றுபடாவிட்டால் OPS ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், அய்யப்பன் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வாய்ப்புள்ளது.
News November 5, 2025
ராமதாஸை சுற்றி திமுகவின் கை கூலிகள்: அன்புமணி

ராமதாஸை சுற்றி துரோகிகள், தீயசக்திகள், திமுகவின் கை கூலிகள் உள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். ராமதாஸிடம் இருந்து தன்னை அவர்கள் பிரித்துவிட்டதாகவும், அந்த துரோகிகள் உள்ள வரை கண்டிப்பாக இணையமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை மன உளைச்சலில் கூறுவதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். 10 மாதங்களாக நீடிக்கும் அப்பா, மகன் மோதல் பாமகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


