News November 4, 2025

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 5, 2025

எலான் மஸ்க் பொன்மொழிகள்!

image

*உங்கள் இலக்கை அடைய நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், எந்த தடையாக இருந்தாலும் அதை அடைய வழி கிடைக்கும். *ஒவ்வொரு பிரச்சனையையும், அதை தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பாருங்கள். *எப்போதும் சிறந்ததை பற்றி சிந்தியுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள். *படித்தல் என்பது மனதை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாகும்.

News November 5, 2025

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தம்: TTV

image

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். 2026 தேர்தலில் EPS எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்டு தான் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் TTV தெரிவித்துள்ளார். EPS-ன் நடவடிக்கைகளை பார்த்து மனமுடைந்த காரணத்தால், திமுகவில் இணையும் முடிவை அவர் எடுத்திருப்பார் என்றும் TTV பேசியுள்ளார்.

News November 5, 2025

சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

image

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!