News November 4, 2025
இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (நவ.04) ஜோலார்பேட்டை ஒன்றியம் பாய்ச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சுகேஷ் என்பவர் இறந்தார். இந்த நிலையில் அவரின் குடும்ப நலன் கருதி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அவரது சகோதரி சுவாதிக்கு பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி நவ.04 இன்று வழங்கினார்.
Similar News
News November 5, 2025
ஓடும் ரயிலில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த புஷ்பா (வயது 90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 4, 2025
பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது!

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் சேர்ந்தவர் பிரபு இவர் முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் தொந்தரவு கொடுத்துயுள்ளார். இவரது தாயார் இன்று (நவ.4) ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் பிரபுவை கைது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News November 4, 2025
இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று நவம்பர் 04) இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளவர்களை


