News November 4, 2025
இரவில் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!
Similar News
News November 5, 2025
எலான் மஸ்க் பொன்மொழிகள்!

*உங்கள் இலக்கை அடைய நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், எந்த தடையாக இருந்தாலும் அதை அடைய வழி கிடைக்கும். *ஒவ்வொரு பிரச்சனையையும், அதை தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பாருங்கள். *எப்போதும் சிறந்ததை பற்றி சிந்தியுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள். *படித்தல் என்பது மனதை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாகும்.
News November 5, 2025
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தம்: TTV

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தமளிப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். 2026 தேர்தலில் EPS எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பில்லை என புரிந்து கொண்டு தான் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பதாகவும் TTV தெரிவித்துள்ளார். EPS-ன் நடவடிக்கைகளை பார்த்து மனமுடைந்த காரணத்தால், திமுகவில் இணையும் முடிவை அவர் எடுத்திருப்பார் என்றும் TTV பேசியுள்ளார்.
News November 5, 2025
சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.


