News November 4, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

image

ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வரவு வைக்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானோர் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

image

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

News November 5, 2025

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: விஷ்ணு விஷால்

image

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.

News November 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

error: Content is protected !!