News November 4, 2025
அரியலூர்: வீரர்களை வாழ்த்திய அமைச்சர்

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதி செந்துறை ஒன்றியம் பொன் பரப்பி மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான தகுதி தேர்வு (நவ.4) இன்று நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வீரர் மற்றும் வீராங்கனை வாழ்த்தினார். இதில் செந்துறை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Similar News
News November 5, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (04.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
News November 4, 2025
அரியலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு வழங்கல்

செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 10மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு, பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் “தேர்வை
வெல்வோம்” என்ற வழிகாட்டி வினா-விடை தொகுப்பினை இன்று (நவ.04) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் தேர்வுகளை நம்பிக்கையுடன்
எதிர்கொண்டு, வெற்றிபெற மாணவ-மாணவியரை வாழ்த்தினார்.


