News April 19, 2024

9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 8.59% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதிய தலைமுறை வாக்காளர்கள் பலர் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

ஹை அலர்ட்டில் பாகிஸ்தான்

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுக்கலாம் என பாக்., உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, பாக்., ராணுவம் தனது அனைத்து விமானப்படை தளங்கள், விமான நிலையங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News November 11, 2025

வந்தாச்சு குழந்தைகளுக்கான UPI.. இனி டென்ஷன் இல்ல!

image

குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு தொடங்காமல், UPI பரிவர்த்தனை செய்ய Junio UPI Wallet என்ற திட்டத்தை RBI அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து குழந்தைகள் அறிய இது உதவும் என நம்பப்படுகிறது. இந்த Wallet பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். ஆகவே செலவு வரம்பு, பரிவர்த்தனை எதற்காக, எத்தனை முறை, எவ்வளவு செலவிடப்படுகிறது போன்றவை பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

News November 11, 2025

நடிகர் அஜித் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

image

சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நடிகர் SV சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!