News November 4, 2025

நாகை ஆட்சியருக்கு எம்.பி. கோரிக்கை

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் மருதூர், தகட்டூர், பஞ்சநதிகுளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி விவசாய பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுமாறு நாகை ஆட்சியருக்கு எம்.பி.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 5, 2025

நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

நாகை: புதிய சேவை இன்று முதல் அமல்!

image

நாகை கோட்டத்திற்குட்பட்ட நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதாா் அட்டையை பயன்படுத்தி எந்தவித படிவமும் பூா்த்தி செய்யாமல் உங்களது அஞ்சலக கணக்கில் இருந்து ரூ.5,000 வரை பணம் எடுக்கலாம் என்றும், அதுபோல எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தி கொள்ளலாம் என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

நாகை: தொழில் தொடங்க நிதியுதவி!

image

நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தினா் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க அரசு நிதி உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்-222) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!