News November 4, 2025
பதில் சொல்லுங்க முதல்வரே பதில் சொல்லுங்க: நயினார்

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்து, குற்றங்களைப் பெருகவிட்டு, பின் குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன் என்று நயினார் சாடியுள்ளார். இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா, மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முடியுமா அல்லது இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா, பதில் கூறுங்கள் முதல்வரே என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 4, 2025
அழகியே.. அரசியே.. சமந்தா

சுட்டி சமந்தாவின் சேட்டைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. SM-யில் ஆக்டிவா இருக்கும் சமந்தா, இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸை பார்த்தவுடன், ‘24’ படத்தில் வரும் “மெய் நிகரா” பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு எந்த பாடல் நினைவுக்கு வந்தது? கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: மாணவர்கள் குஷி

தேர்தலையொட்டி இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளன. அந்த வகையில், மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும். +2 தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவதால், 2 மாதங்களுக்கும் மேல் லீவுதான். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6-ல் கடைசி தேர்வு நடைபெற இருப்பதால், ஜூன் வரை அவர்களுக்கும் விடுமுறையே. மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.
News November 4, 2025
1% பணக்காரர்களின் சொத்து 62% ஆக உயர்வு

இந்திய மக்கள் தொகையில் 1% உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 23 ஆண்டுகளில் 62%ஆக உயர்ந்துள்ளதாக ஜி20 அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 54% ஆக உள்ளது. மேலும், உலகளவில் உள்ள 1% பெரும் பணக்காரர்கள், கடந்த 23 ஆண்டுகளில் 41% புதிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதேசமயத்தில், உலகின் பாதி மக்கள் வெறும் 1% மட்டுமே சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?


