News November 4, 2025
தஞ்சை அருகே பரிதாப பலி

பஞ்சநதிக்கோட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்த இவர் சாமிப்பட்டி பிரிவு சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
Similar News
News November 4, 2025
தஞ்சாவூர்: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
News November 4, 2025
தஞ்சாவூர்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
தஞ்சை: குளத்தில் தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி பலி

பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாடிமுத்து (45) என்பவர், ஓட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காடு பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கியபோது எதிர்பாராத விதமாக தடுமாறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


