News November 4, 2025

பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

image

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.

Similar News

News November 4, 2025

பிஹார் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.11-ம் தேதி நடைபெற உள்ளது.

News November 4, 2025

BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

image

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

image

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.

error: Content is protected !!