News November 4, 2025
வேலூர் துணை முதல்வரை வரவேற்ற கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 3) வேலூருக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆட்சியர் சுப்புலட்சுமி மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதில் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 4, 2025
வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

வேலூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
வேலூரில் துணை முதல்வர் பங்கேற்கும் விழா

வேலூர் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.04) காலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் நேற்றிரவு விழா மேடை மற்றும் பாதுகாப்பு பணி குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News November 4, 2025
வேலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


