News April 19, 2024

பதற்றம் அடைய வேண்டாம் – ராணிப்பேட்டை கலெக்டர்

image

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பதற்றமின்றி பணியாற்ற வேண்டும்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது; வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் சிறு சிறு கோளாறுகள், பிரச்னைகள் இருந்தால் அச்சம் அடைய வேண்டாம்; உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர் குழு மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

ராணிப்பேட்டை: உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு!

image

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் BHEL நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சியாளர் (Trade Apprentice) பணிக்கு 261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வரும் ஆக.21 முதல் ஆக.23 வரை BHEL HRM கருத்தரங்க அறையில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.12,000மும் குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!