News November 3, 2025

தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட உட்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதளங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வளைத்தலங்களில் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும். உறுதி செய்யப்படாத தகவல்கள், வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் போன்றவற்றை தவிர்க்கவும். தென்காசி மாவட்ட காவல் துறை உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது.

Similar News

News November 4, 2025

தென்காசி: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

தோரணமலை முருகன் கோவிலில் நவ.5 ல் கிரிவலம்

image

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இம்மாத பௌர்ணமி யொட்டி நவம்பர் 5 காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடைபெறும் .இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து வருகிறார்.

News November 4, 2025

தென்காசி: சிறப்பு திருத்த உதவி மையம்

image

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடர்பாக தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி உதவி மையத்தின் 04633-222212 & 6381443953 ஆகிய தொலைபேசி எண்களில் தீவிர திருத்தம் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பாக 1950 என்ற கட்டணமில்லா வாக்காளர் உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

error: Content is protected !!