News November 3, 2025
கடலோர ஊர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர ஊர் காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 45 தினங்கள் மாவட்ட ஆயுதப் படையில் வைத்து பயிற்சிகள் வழங்கப்படும் பின்பு அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
குமரி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குளச்சல் புளிமூட்டுவிளையை சேர்ந்தவர் கொத்தனார் விக்னேஷ்(29). நேற்று(நவ.3) இவர் அம்மாண்டிவிளையில் உள்ள மனைவியின் வீட்டுக்குச்சென்று விட்டு பைக்கில் பரப்பற்று பகுதியில் வந்த போது முன்னால் சென்ற காரை முந்த முயன்றுள்ளார். அப்போது திடீரென எதிரில் வந்த லாரி பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 4, 2025
குமரி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

ஆரல்வாய்மொழி போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


