News November 3, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) இராணிப்பேட்டை மாவட்டத்தில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

ராணிப்பேட்டை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News November 4, 2025

ராணிப்பேட்டை: வேகத்தடையால் கோர விபத்து – பறிபோன உயிர்!!

image

ராணிப்பேட்டை, நாகவேடு அடுத்த பருத்திப்புத்தூர் கிராமம் அருகே இன்று (நவ.04) காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர். புதிய தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடையில் மோதி விபத்துக்குள்ளானார். தலைக்கவசம் அணியாததால் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பின் அவ்வழியே வந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!