News November 3, 2025
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற சௌமியா அன்புமணி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மணி விழா நிகழ்வு தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் நிகழ்வான இன்று பசுமைத்தாயக தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார். ஆதீனம் அவருக்கு கோயில் பிரசாதம் நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார்.
Similar News
News November 4, 2025
மயிலாடுதுறை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <
News November 4, 2025
மயிலாடுதுறை: உலக சாதனை படைத்த மாணவர்கள்

நடராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளை சேர்ந்த 34 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வஜ்ராசனம், சிரசாசனம், ஹாலாசனம், பத்ம பத்மாசனம ஆகிய ஆசனங்களை அரை மணி நேரம் ஒரேநிலையில், அசையாமல் செய்து காட்டினர். இதையடுத்து இதனை யோகா வேர்ல்ட் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட் என்ற அமைப்பு இதனை உலக சாதனையாக அங்கீகரித்தது.
News November 4, 2025
மயிலாடுதுறை: ஒரே நாளில் பெறப்பட்ட 265 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கி கடன், அடிப்படை வசதி, நில பிரச்சினை தொடர்பாக மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.


