News November 3, 2025

சிவகங்கை: ஊர்க்காவல் படை தேர்வு ஒத்திவைப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப 10.10.2025-ம் தேதி முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025-ம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பும் மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மேற்படி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News November 4, 2025

சிவகங்கை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 4, 2025

சிவகங்கை: ஆசிரியையிடம் நகைப்பறித்த 6 பேர் கைது

image

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் நகரை சேர்ந்த ஆசிரியை சுதா என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் நகையை பறித்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், கீழத்துாவலைச் சேர்ந்த நாகமுனீஸ்வரன், பீபியேந்தலைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் (எ) பிரசாத் 25, 16 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 4, 2025

சிவகங்கை இளைஞர்களை சுட்டு பிடித்த போலீஸ்

image

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் துடியலூர் அருகே சிவகங்கையை சேர்ந்த குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சம்பவ இடத்தில் தடையவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!