News November 3, 2025

சென்னை–திருவண்ணாமலை ரயில் கோரி எம்.பி. கடிதம்

image

திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை–திருவண்ணாமலை பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை விரைவில் இயக்கவும், திருவண்ணாமலை–கோயம்புத்தூர் இடையே புதிய இரவு நேர ரயில் சேவையை தொடங்கவும் ரயில்வே வாரியத் தலைவருக்கு, இன்று (நவ.3) திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கடிதம் எழுதியுள்ளார். மக்கள் கல்வி, வேலை, வணிக தேவைக்காக இந்த இரு ரயில்களும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!

News November 4, 2025

தி.மலை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. திருவண்ணாமலையில் மட்டும் 69 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

தி.மலை : அரசு பஸ் மோதி இளம்பெண் பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(35). இவரின் மனைவி தரணி(32). இருவரும் நேற்று முன் தினம் இரவு போளூரில் நடந்த உற்வைனர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஆரணி – போளூர் நெடுஞ்சாலையில் வந்த அரசு ப மோதியதில் தூக்கி வீசப்பட்ட தரணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!