News April 19, 2024

கரூர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர்

image

கரூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர் ஈடுபட உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 824 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 100 பேரும், துணை ராணுவத்தினர் 469 பேரும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் 446 பேரும் ஈடுபட உள்ளனர்.

Similar News

News August 22, 2025

கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

கரூர்: மனைவி முன்பே கணவர் துடிதுடித்து பலி!

image

கரூர்: சின்னகோதுரைப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் தனது மனைவி செல்வி(44), மகள் தனுசியா(14) ஆகியோருடன் காரில் கரூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே பவுத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி பலியானார். அவரது மனைவி, மகள் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 22, 2025

கரூர் : குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

கரூர் நங்கவரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் அவரது உறவினரான முருகானந்ததிற்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜாவின் அப்பா செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்தியுள்ளார். நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்பி பரிந்துரையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!