News November 3, 2025
ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 4, 2025
ராம்நாடு: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

இராமநாதபுரம் மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழையின்றி வெயில் வாட்டி வதைக்கிறது. இதே நேரத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக காலை நேரங்களில் பனிமூட்டம் சூழ்ந்து சாலைகள் மறைந்து விடுகின்றன. இதனால் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பனிபொழிவால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் அடைகின்றன்ர். விவசாயிகள் வடகிழக்கு பருவமழைக்காக எதிர்பார்த்துள்ளனர்.
News November 4, 2025
ராம்நாடு: ஆபரணங்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ தெரு, சாந்த் பீபி காம்ப்ளக்ஸ், 2வது தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் “செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயற்சி” அளிக்கப்பட உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கப்படும் நாள் நவ. 14 ஆகும். பயிற்சி நாட்கள் – 14. பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM . முன்பதிவுக்கு :
9087260074,8056771986. SHARE!


