News November 3, 2025

நெல்லையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு; சிறுமி உயிரிழப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவம்பர் 3) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இவ்வாறு இந்த நிமோனியா காய்ச்சலால் மூன்று வயது சிறுமியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News November 4, 2025

நெல்லையில் கொலை; 15 நிமிடத்தில் குற்றவாளி கைது

image

நெல்லை மாநகர பெருமாள்புரம் டாஸ்மார்க் பாரில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோழி கடையில் வைத்து நேற்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் என்பவரை அவரது நண்பரான செல்வம் என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் 15 நிமிடங்களில் குற்றவாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

News November 3, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 3, 2025

தொந்தரவு செய்தால் நடவடிக்கை – கலெக்டர் அட்வைஸ்

image

ஆட்சியர் சுகுமார் இன்று அளித்த பேட்டியில், வாக்கு சாவடி அதிகாரிகள் சிறப்பு திருத்தபட்டியல் சரிபார்ப்பு பணியின் போது அரசியல் கட்சி முகவர்கள் உடன் செல்ல அனுமதி உள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை கலைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

error: Content is protected !!