News November 3, 2025
ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40 புள்ளிகள் உயர்ந்து 83,978 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் உயர்ந்து 25,763 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மகிந்திரா, டாடா, SBI பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், மாருதி சுசூகி, TCS நஷ்டத்தை சந்தித்துள்ளன.
Similar News
News November 4, 2025
வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்!

✱தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி ✱செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News November 4, 2025
DMK அதிகாரத்துக்கு பயப்படும் அரசியல் கட்சிகள்: G.K.வாசன்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று G.K.வாசன் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என சாடினார். மேலும், முறையாக தேர்தல் நடத்த கோட்பாடுகளை வழங்கும் தேர்தல் ஆணையத்தை தோல்வி பயத்தால் ஆளும் திமுக எதிர்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 4, 2025
FLASH: 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், நவ.9-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. குடையை ரெடியா வையுங்க.


